சனி, 19 பிப்ரவரி, 2022

இயேசுவின் குண நலனை நமது வாழ்வில் வெளிப்படுத்த...(20.02.2022)

யேசுவின் குண நலனை நமது வாழ்வில் வெளிப்படுத்த...




இன்றைய நாள் வாசகங்கள்,  பழைய ஏற்பாட்டின் ஆதாமையும்,   புதிய ஏற்பாட்டின் ஆதாமான இயேசுவையும், ஒப்பிட்டுப் பார்க்க நம்மை அழைக்கின்றது.  


பழைய ஏற்பாட்டு ஆதாமின் மனித இயல்பை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் புதிய ஏற்பாட்டு ஆதாமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் குணநலன்கள் நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்ற செய்திதான் இன்றைய நாளின் மையச் சிந்தனையாக உள்ளது. 

தாவீது தன்னைக் கொல்ல தேடிய சவுலை, கண்ணெதிரே கண்ட போதும் கூட அவருக்கு எந்தவித தீங்கும் செய்யாது சென்றார். பகைவரை மன்னிப்பதற்கு ஒரு மனம் வேண்டும். தாவீதிடம் அந்த மனம் இருந்தது. அந்த மனம் தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் இருந்தது.  

எனவே தான் சிலுவையில் தொங்கும் போது கூட, தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்தவராய், தன் உயிரை தியாகம் செய்தார். அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல இந்த சமூகத்தில் நாம் வாழ அழைக்கப்படுகிறோம். அதற்கு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்படுவது போல, அனைவரையும் அன்பு செய்யவும் ஏழைகளை நேசிக்கவும், தேவையில் இருப்பவரின் தேவையை கண்டு கொண்டு, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யக் கூடியவர்களாக, நாம் இருப்பதும், ஆண்டவர் இயேசுவின் குண நலனை நமது வாழ்வில் வெளிப்படுத்துவதாகும். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...