புதன், 9 பிப்ரவரி, 2022

தாழ்ச்சி, நிதானம்., பொறுமை...(10.02.2022)

தாழ்ச்சி, நிதானம், பொறுமை




இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ” என்றார் திருவள்ளுவர். இறைவனால் முடியாத செயலைக் கூட, விடா முயற்சியினால் அடைந்துவிடலாம் என்பது அதன் பொருள். 

அந்தக் குறளுக்கு விளக்கம் அளிப்பதுபோல அமைந்திருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.  கிரேக்கப் பெண்ணின் தன் மகளைக் குணப்படுத்துமாறு இயேசுவிடம் வேண்டுகிறார். இயேசுவோ பிள்ளைகளுக்குரிய உணவை நாய்களுக்கு போடுவது முறையல்ல என்று கூறி  மறுத்துவிடுகிறார். ஆனால், அந்தப் பெண் மனந்தளர்ந்துவிடவில்லை. மாறாக, சற்றும் சளைக்காமல் இயேசுவிடம் வாதாடி, அதாவது பிள்ளைகள் வயிறார உண்டபின் மேஜையின் மேலிருந்து கீழே விழும் துண்டுகளை நாய்கள் ஒன்னுமே என்று கூறி தன் மகளுக்கு நலம் பெற்றுவிடுகிறார். இயேசு முதலில் விருப்பம் கொள்ளாவிட்டாலும்கூட, அப்பெண்ணின் விடாமுயற்சியையும், நம்பிக்கையையும் கண்டு வியந்து, தம் மனதை மாற்றிக்கொள்கிறார்.


 நாமும் நம்பிக்கை, விடாமுயற்சி இழக்காமல் செபிப்போம், உழைப்போம். அதுபோலவே ....

    மனித வாழ்வில் மிகவும் அவசியமான ஒன்று தாழ்ச்சி.  நாம் விரும்புவதை பெற்றுக்கொள்வதற்கு எப்போதும் அதிகாரத்தையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தினால், நாம் விரும்புவதை பெற்றுக் கொள்ள இயலாது. மாறாக,  தாழ்ச்சியோடு நாம் முன்னெடுக்கின்ற போது, ஆண்டவரிடமிருந்து அனைத்து விதமான ஆசிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். 


    இதற்கு சிறந்த உதாரணமாகத் தான் இன்றைய நாளில் கானானியப் பெண்மணி விளங்குவதை நாம் வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.  நாம் ஆண்டவரிடத்திலும் அடுத்தவரிடத்திலும் நாம் விரும்புவதை கேட்பதற்கு முன்பாக உள்ளத்தில் தாழ்ச்சியோடு, நிதானத்தோடு, பொறுமையோடு செயல்பட்டு வேண்டுவதைப் பெற்றுக்கொள்ள இறையருள் வேண்டுவோம். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...