திங்கள், 21 பிப்ரவரி, 2022

இயேசுவை ஆழமாக புரிந்துகொள்ள...(22.02.2022)

 

இயேசுவை ஆழமாக புரிந்துகொள்ள...



    இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து திரு அவையை பேதுரு வழியாக நிறுவுவதை நாம் வாசிக்க கேட்டோம்.  மனிதனாக வாழுகின்ற ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் இருக்கிறது. அந்த ஆசையின் அடிப்படையில், பல நேரங்களில் நாம் பல இடங்களில் நாம் செய்தவைகளை மற்றவர்கள் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும், நாம் செய்தவைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், என எண்ணுகிறோம். அதனடிப்படையில் நாம் பல நேரங்களில் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறோம். 

    ஆனால், இந்த அங்கீகாரத்தையும் பாராட்டையும், புகழ்ச்சியையும் அடிப்படையாகக்கொண்டு, நமது செயல்கள் அமைந்திருத்தல் ஆகாது. அதைக் கடந்து, நமது செயல்கள் காண்பவர்கள் இயல்பாகவே நாம் செய்யக்கூடிய நற்பண்புகளை புரிந்துகொண்டு அதை அவர்களும் தங்கள் வாழ்வில் பின்பற்றக் கூடியவர்களாக மாற வேண்டும். அத்தகைய வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இயேசுவின் செயல்பாடுகள் அப்படி அமைந்திருந்தன. எனவேதான் பலர் இயேசுவை பல விதங்களில் புரிந்து கொண்டாலும், பேதுரு அவரை மெசியாவாகப் புரிந்து கொண்டார். 

    தன்னை முழுமையாக புரிந்து கொண்ட அந்த பேதுருவின் மீது திருஅவையை நிறுவுவதாக இயேசு கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகள் காலப்போக்கில் நிறைவேறின. பேதுரு திருஅவையின் தந்தையாக மாறினார். திருஅவையில் படிக்காத ஒரு நபர், ஆனால் அனைவரையும் ஒருங்கிணைத்து, இச்சமூகத்தில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை நிலைநாட்டிட முழுமுதல் காரணமாக இருந்தார். எப்படி அவரால் இது நிகழ்ந்தது? என சிந்திக்கின்ற பொழுது, அவர் இயேசுவை முழுமையாக அறிந்து கொண்டார், புரிந்துகொண்டார். எனவே தான் அவரால் அத்தகைய செயலைச் செய்ய முடிந்தது. 

    நாமும் ஆண்டவர் இயேசுவை ஆழமாகப் புரிந்து கொள்கின்ற போது, நம்மால் இந்த உலகத்தில் பலவிதமான அற்புதமான காரியங்களைச் செய்ய முடியும். எனவே நாம் ஆண்டவர் இயேசுவை ஆழமாக புரிந்துகொள்ள, புரிந்து கொண்ட இறைவனை நமது வாழ்வில் செயல்கள் மூலம் வெளிக்காட்டிட இறை அருள் வேண்டுவோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...