வியாழன், 24 பிப்ரவரி, 2022

இணைந்து வாழ...(25.02.2022)

 இணைந்து வாழ...


    


    நாளுக்குநாள் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில்ஆண்டவர் இணைந்து வாழ இன்றைய வாசகங்கள் வழியாக அழைப்பு தருகிறார்.


    கடவுள் ஆணும் பெண்ணுமாக படைத்தார் அவர்களை ஒருவரோடு ஒருவர் இணைத்து வைத்தார் அந்த இணைப்பில் பலவிதமான கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் அனைத்திற்கு மத்தியிலும் இணைந்து இச்சமூகத்தில் வாழவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. 

    கடவுள் இணைந்திருப்பதை தான் விரும்புகிறார், தனித்திருப்பதை அல்ல. நாம் ஆண்டவரோடு இணைந்து இருக்க வேண்டும். இச்சமூகத்தில் நாம் அடுத்தவரோடு இணைந்திருக்க வேண்டும். கணவன் மனைவியோடு இணைந்திருக்க வேண்டும். மனைவி கணவனோடு இணைந்திருக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகளோடும், பிள்ளைகள் பெற்றோரோடும் இணைந்திருக்க வேண்டும். 

    இணைந்து வாழ்வதில் பலவிதமான இன்னல்கள் வந்தாலும் அனைத்தையும் புறந்தள்ளி, தனித்து வாழ்வதை தவிர்த்து, இணைந்து, இன்புற்று, ஒருவர் மற்றவரை புரிந்து கொண்டு, ஒருவர் மற்றவரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய இயேசுவின் பணியாளர்களாய், ஒருவர் மற்றவரை தாங்கக் கூடியவர்களாக இச்சமூகத்தில் உருவாக்கிட இறையருளை வேண்டுவோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...