செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள...(1-8-22)

நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள...(1-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
                 இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா தவறான வாழ்வு வாழுகின்ற இஸ்ரயேல் மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டுகின்றார். அவரின் வார்த்தைகளை கேட்டு தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்வதற்கு முன்னதாகவே அனனியா என்ற மனிதன் , கடவுளின் சார்பாக நான் வாக்குறுதிகளை தருகிறேன்; கடவுள் கூறுவதை நான் அறிவிக்கிறேன் என்று கூறி, கடவுள் நம்மை மன்னித்து விட்டார்; மிகக் குறுகிய காலத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து நம்மை கடவுள் மீட்பார் என பொய்யான ஒரு இறைவாக்கினை உரைக்கின்றார். 
இந்த மனிதன் உரைப்பது பொய்யான இறைவாக்கு என்பதை எரேமியா இறைவாக்கினர் எடுத்துரைப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம்.

  நாம் வாசிக்கின்ற ஒவ்வொரு இறை வார்த்தையுமே ஆழமாக நமது இதயத்தில் இருத்தி சிந்திக்க அழைப்பு தருகிறது. 

         இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கி பார்த்து, நல்லதொரு மாற்றத்தினை முன்னெடுக்கின்ற மனிதர்களாக நாம் இருப்பதற்கான அழைப்பை இன்றைய நாளில் இறைவன் நமக்கு தருகின்றார். 

         இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, இயேசுவோடு இருந்தவர்கள் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, இயேசுவின் அருகில் இருந்த நபர்களை பார்த்து, இயேசுவின் சீடர்கள் கூறினார்கள்- இவர்கள் பசியால் மயக்கமுற நேரிடலாம். எனவே அவர்களுக்கான உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள அவர்களை அனுப்பி விடும் என்று கூறிய போது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களிடம் இருப்பது என்ன?  அதை இவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள் என கூறக்கூடியவராய், அவர்களிடம் இருப்பதைக் கொண்டு வல்ல செயல்களை நிகழ்த்துவதை நாம் வாசிக்க கேட்டோம். 

    இறைவனின் வார்த்தை ஒவ்வொரு நாளும் நமது வாழ்வில் பலவிதமான வல்ல செயல்களை நிகழ்த்த வல்லது. நாம் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கின்ற போது அவர் நம்மை நோக்கி 100 அடிசன் எடுத்து வைக்கக்கூடிய கடவுளாக இருக்கின்றார். நாம் நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்வோம். நாம் கேட்ட இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள முயல்வோம். அதற்கான அருளை வேண்டி இன்றைய நாளில் இறை வேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...