வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

மன்னிப்பை வலியுறுத்தும் ஆண்டவர்(11-8-22)

மன்னிப்பை வலியுறுத்தும் ஆண்டவர்
(11-8-22)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
        மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே மரணத்தை சந்திப்போம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த மரணத்தை சந்திக்கின்ற நேரம் வரை மன்னிக்க இயலாத மனப்பான்மையை இதயத்தில் இருத்திக் கொண்டே பயணிக்க கூடிய மனிதர்களாக இன்று நம்மில் பலரும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறோம். ஆனால், இன்றைய வாசகங்கள் அனைத்துமே மன்னிப்பை வலியுறுத்துகின்றன.

 கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்திற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து மன்னிப்பையும் இரக்கத்தையும் விட்டுச் சென்றார். குற்றுயிரும் குலை உயிருமாக சிலுவையில் தொங்குகின்ற சூழ்நிலையில் கூட தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய மனிதர்களை மன்னிக்கும் மனம் படைத்தவராக ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருந்தார். இந்த மன்னிப்பின் நாயகனை பின் தொடரக்கூடிய நாம் மன்னிக்கும் மனம் கொண்ட மனிதர்களாக, நமது வாழ்வை நகர்த்தி கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை இன்று எழுப்பிப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். 

     மன்னிப்பை வலியுறுத்தும் ஆண்டவரை பின்பற்றக் கூடிய நாம் மன்னிக்கும் மனம் படைத்தவர்களாக மாறிட இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...