வெள்ளி, 29 ஜூலை, 2022
புனித மார்த்தா நினைவு....(29.7.2022)
வியாழன், 28 ஜூலை, 2022
புனித அல்போன்சா அவர்களை பின்பற்ற...(28.7.2022)
புதன், 27 ஜூலை, 2022
இழக்கத் துணிந்த மனிதர்களாக...(27.4.2022)
வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்துக் கொண்டு பயணிக்க(24.7.2022)
அர்த்தம் உள்ள வகையில் அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்...(23.7.2022)
மகதலா மரியா வழியாக...(22.7.2022)
வியாழன், 21 ஜூலை, 2022
கடவுளுக்கு அர்ப்பணம்....(21.7.2022)
ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக வாழ ....(20.7.2022)
திங்கள், 18 ஜூலை, 2022
வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற மனிதர்களாவோம்...(19.7.2022)
இறைவனோடு இணைந்த வாழ்வு....(16.07.2022)
இறைவனோடு இணைந்த வாழ்வு....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இன்றைய வாசகங்கள் அனைத்துமே ஆண்டவரின் அருகில் அமர்ந்திருக்க, ஆண்டவரோடு உரையாட, ஆண்டவரோடு உறவை வளர்த்துக் கொள்ள நமக்கு அழைப்பை தருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் கடவுளின் தூதர்களை கண்டு கொள்வதையும், அவர்களை உபசரிப்பதையும், அவர்களோடு உரையாடி, உறவாடி, அவர்களின் ஆசிகளை பெற்றுக் கொள்வதையும் வலியுறுத்துகின்றன.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கடவுளின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடிய நபராக, ஆண்டவரின் வார்த்தைகளின் மீது அவர் கொண்டிருக்கின்ற ஆழமான நம்பிக்கையும், இந்த வார்த்தைகளின் வழியாக அவரோடு அவர் இணைந்துள்ள வாழ்வையும் நம்மிடையே எடுத்துரைப்பதாக இரண்டாம் வாசகம் அமைகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட மார்த்தா மரியா என்ற இருவரில், மரியா நல்ல பங்கை தேர்ந்து கொண்டார் என, தன் அருகில் அமர்ந்து தன்னோடு உரையாடிக் கொண்டிருந்த மரியாவைப் பற்றி இயேசு புகழ்ந்துரைப்பதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
இந்த வாசகப் பகுதிகள் அனைத்துமே வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, கடவுளோடு நேரம் செலவிடக்கூடிய மனிதர்களாக, அவரோடு உரையாடக் கூடியவர்களாக, உறவாடக் கூடியவர்களாக, நாளும் வளர நமக்கு அழைப்பு தருகின்றன. இறைவனோடு இணைந்த வாழ்வை நமதாக்கிக் கொள்ள இறையருள் வேண்டுவோம், இன்றைய நாளில். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.
அடையாளமாக நாம் மாறுவேரம்......(18.07.2022).
அடையாளமாக நாம் மாறுவேரம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகமானது கடவுளுக்கு உகந்த ஒரு வாழ்வை வாழ அழைப்பு தருகிறது. நல்லது எதுவோ, நேர்மையானது எதுவோ, நீதி எதுவோ, அதனை பின்பற்றக்கூடிய மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்ற அழைப்பு முதல் வாசகம் வழியாக நமக்கு தரப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவினிடத்தில் தங்களுக்கு அடையாளத்தை காட்டுமாறு பரிசேயர்களும் சதுசேயர்களும் இயேசுவை அணுகுகிறார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு அடையாளம் தரப்பட மாட்டாது என்கிறார்.
இயேசுவின் இந்த வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கின்ற போது, அடையாளங்களை கேட்கின்ற நபர்களாக நாம் இல்லாமல், நமது செயல்கள் மூலமாக நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கான அடையாளமாக நாம் மாறுவதற்கு இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.
வெள்ளி, 15 ஜூலை, 2022
மனிதநேயமிக்க மனிதர்களாக...(15.7.2022)
புதன், 13 ஜூலை, 2022
நம்பிக்கை கொண்ட மனிதர்களாக....(14.7.2022)
இறைவன் விரும்புகின்ற மாற்றம்...(12.7.2022)
ஆண்டவரின் பாதையில் பயணம் செய்ய....(13.07.2022)
வெள்ளி, 8 ஜூலை, 2022
வார்த்தைகளை வாழ்வாக்குவோம்.(8.7.2022)
புதன், 6 ஜூலை, 2022
நமது வாழ்வால் சான்று பகர....(7.7.2022)
திங்கள், 4 ஜூலை, 2022
இறைவன் இரக்கம் உள்ளவர்....(5.7.2022)
வெள்ளி, 1 ஜூலை, 2022
மரியாவின் மாசற்ற இதயம் .... (25.6.2022)
மரியாவின் மாசற்ற இதயம்

மரியாவின் மாசற்ற இதயம் என்பது கன்னி மரியாவின் தூய இயல்பையும் அன்பையும் சுட்டிக்காட்டுவதாகும். இறைவனின் திட்டத்திலும், மனிதகுல மீட்பிலும் மரியாவின் பங்களிப்பை நாம் தியானிக்க உதவும் ஒரு பக்தி முயற்சியாக இது திருஅவையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசுவின் திரு இதய பெருவிழாவைத் தொடர்ந்து வரும் சனிக்கிழமை மரியாவின் மாசற்ற இதயத்துக்கான விழாவாக கொண்டாடப்படுகிறது.
கடவுள் ஒரு நாள் அருள்பணியாளரிடம் வந்து, "நான் மனிதர்களோடு கண்ணாமூச்சி விளையாடப் போகிறேன. எங்கு ஒளிவது என்று என்னுடைய தூதர்களைக் கேட்டேன். அவர்களில் சிலர் “கடலுக்கு அடியில்” என்றார்கள், சிலர் “உயர்ந்த மலையில்” என்றார்கள், பலர் “நிலவின் மறு பகுதியில்” என்றார்கள், வேறு சிலரோ “தொலை தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்றில் ஒளிந்து கொள்ளுங்கள்” என்றார்கள், எந்த இடத்தில் ஒளிந்து கொண்டால் மனிதர்களால் என்னை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதை நீர் சொல்லும்" என்று கேட்டாராம்! அதற்கு அந்த அருள்பணியாளர் நன்குசிந்தித்துவிட்டு சொன்னாராம், மனிதரின் இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்! அங்குதான் மனிதர் அவ்வளவு எளிதாய் தேட மாட்டாரகள்;; என்றாராம்! இறைவன் குடிகொண்டிருப்பது எங்கோ அல்ல, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலே.
உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும்
கிறிஸ்து இயேசுவில் பிரியமான வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு என் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். ஜூன் மாதம் திரு இருதயங்களுக்கு விழா எடுத்து இறை அன்பில் நாம் மகிழும் மாதம்! இன்று மரியாவின் இதயத்தை பற்றி சிந்திக்க நற்செய்தியை புரட்டி பார்க்க உங்களை அழைக்கிறேன்
மரியாவின் இதயம் மாசற்ற இதயம்
லூக்கா நற்செய்தி பிரிவு ஒன்று, இறைச்சொற்றொடர்கள் 28-30: “வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.”
கன்னி மரியா அருள்மிகப் பெற்றவர்! கடவுளின் அருளை அடைந்தவர்! கடவுளைத் தாங்கும் ஆலயம்! அதனால்தான் மரியாவின் இதயம் மாசற்ற இதயம்!
மரியாவின் இதயம் இறைதிட்டத்தின் ஏற்கும் இதயம்
யோவான் நற்செய்தி பிரிவு ஒன்று, இறைச்சொற்றொடர்கள் 1, மற்றும் 14ல் வாசிக்கின்றோம்: “தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது… வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.”
கடவுள் இவ்வுலகத்தை அன்பு கூர்ந்து தன் ஒரே மகனை இவ்வுலகத்திற்கு அளிக்க நினைத்த போது (யோவா.3,16) மரியாவை தேர்ந்துதெடுத்தார். அதற்கு மரியா, “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்று கேள்வி எழுப்பிய து (லூக்.1,34) வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.” (லூக்.1,35) என்ற இறைத்திடத்தை அறிவிக்கின்றார். அதற்கு மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். (லூக்.1,38)! மரியாவின் இதயம் இறைதிட்டத்தை ஏற்று தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் இதயம்.
பல நேரங்களில் வாழ்வில் வருகின்ற துன்பங்களை நினைத்து வாடும் நாம் இறைவனை தூற்றுகின்றோம்! இது இறைவன் திட்டம் என்று ஏற்க மறுக்கின்றோம்! மரியாவின் வழியில் “நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்” (தி.பா.91:2) என்று நம்மால் கூறமுடியுமா?
மரியாவின் இதயம் உதவிட ஓடும் இதயம்
முதிர்ந்த வயதில் கடவுளின் அருளால் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். தம் உறவினராகிய எலிசபெத்து (லூக்.1:36) என்ற வானதூதர் சொல் கேட்டு மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். (லூக்.1:39 -40).
கருவுற இயலாதவர் என்ற அவப்பெயரைக் கேட்டு மனம் வெதும்பி இருக்கும் எலிசபெத்; கன்னியான தான் அருகில் இருந்தால் மேலும் மனம் வாடும் என்று ஒதுங்கி இருந்த மரியர் இன்று எலிசபெத் கடவுளால் அருள் பெற்றிருக்கிறார்! அவருக்கு இந்த நேரத்தில் உதவவேண்டும் என்று ஓடோடிச் செல்லுகிறார்! மரியாவின் இதயம் பிறரின் தேவையை அறிந்து உதவிட ஓடும் இதயம் என்று படம் பிடித்து காட்டுகிறது லூக்கா நற்செய்தி!
பிறரின் தேவைகள் அறிந்தும் நம் உள்ளத்தை மூடி கொள்கிறோமே ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் அன்னை மரியா?
மரியாவின் இதயம் பரிந்துரைக்கும் இதயம்
யோவான் நற்செய்தி பிரிவு இரண்டு, இறைச்சொற்றொடர்கள் 3 – 5 பார்க்கின்றோம்: திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா,⁕ அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.
திருமண விழாவில் வந்தவர்களை திருப்தியாக கவனித்து அனுப்ப வேண்டும் என்ற பண்பாட்டை காக்க முடியாமல் போய்விடுமேர் அவமானத்தில் தலைகுனியப் போகும் அந்த குடும்பத்தின் நிலை அறிந்த மரியா வேடிக்கை பார்க்காமல் தன்னால் இயன்ற உதவியை செய்ய விரைகிறார்!
அடிப்பட்டு துடிக்கின்ற மக்களை உதவாமல் தங்களையே அவர்களோடு புகைப்படம் (செல்பி) எடுக்கும் நம் மனநிலையை கேள்வி கேட்கின்றது மரியாவின் இதயம்?
மரியாவின் இதயம் ஒரு தாயின் இதயம்
யோவான் நற்செய்தி பிரிவு 19, இறைச்சொற்றொடர்கள் 25-27ல் வாசிக்க கேட்கின்றோம்” “சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார்.”
“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்.1,38)! என்று தன்னையே இறைவனை பெற்றுத்தரும் தாயான மரியா இப்போது இயேசுவால் திருஅவைக்கு தாயாகத் தரப்படுகிறார்!
மேல்மாடியில் சீடர்களோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த அன்னையாக பார்க்கின்றோம் (தி.ப.1,14). துன்பத்தில் துணை இருக்கும் ஒரு தாயாக் திரு அவையில் வேண்டுதல்களை இறைவனிடம் எடுத்துச் செல்லும் தாயாகப் பார்க்கின்றோம்
மரியாவின் இதயம் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் இதயமாக் இறைவனை முழுமையாக நம்பும் இதயமாக (எலிசபெத்து வாழ்த்து லூக்.2:45ஸ் மரியா வாழ்வில் நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் (இடையர்களும் வானதூதர்களும் லூக்.2:19ஸ் சிமியோன் வாழ்த்து செய்தி லூக்.2:51) தம் உள்ளத்தில் பதித்து இருத்திச் சிந்திக்கின்ற இதயமாக் நமது கூக்குரலை கேட்கும் இதயமாக, நமக்கு உதவிட ஓடிவரும் இதயமாக நற்செய்தி காட்டுகிறது! அன்னை மரியாவின் புகழ்பாடும் நாம் அவர் வழியில் பிறர் பணி புரிய இறைவன் அருள்புரிவாராக!
இறைவனின் பாதையில் ...(2.7.2022)
Photography Topics with Pictures...
Photography Topics: 1. Street Photography: 2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...