புதன், 3 ஜூலை, 2024

கடவுள் தன்மையை நம்மகத்தே கொள்வோம்! (04-07-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தவறு செய்கின்றபோது அந்த தவறை மன்னித்து இரக்கம் காட்டுபவராக கடவுள் இருக்கின்றார். இந்த கடவுள் தன்மையை நம்மகத்தே கொண்டவராக, நமக்கு எதிராக குற்றம் செய்த நபர்களை மன்னித்து, அவர்கள் நலிபுற்று இருக்கின்ற நேரங்களில் நமது உடன் இருப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

   ஆண்டவர் இயேசுவினிடத்தில் நலமற்ற ஒரு மனிதனை கொண்டு வந்த போது அவன் பாவத்தின் விளைவாகத்தான் இப்படி இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருந்த மனிதர்களுக்கு மத்தியில், அவனுடைய பாவங்களை மன்னித்து அவனுக்கு நலம் தருகின்ற பணியினை ஆண்டவர் இயேசு முன்னெடுக்கிறார். இந்த இயேசுவை இதயத்தில் இருத்தியவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, ஆண்டவர் இயேசு விரும்புகின்ற மக்களாக, நமக்கு எதிராக குற்றம் செய்த நபர்களை மன்னித்து, அவர்கள் தேவையில் இருக்கின்ற போது நமது உடன் இருப்பை வழங்குபவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...