திங்கள், 22 ஜூலை, 2024

மகதலா மரியா! (22-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது மகதலா மரியாவை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு முதல் சாட்சி அவர். இவர்தான் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை இயேசுவின் சீடர்களுக்கும் உலகுக்கும் உரக்க அறிவித்த முதல் நபர். இந்த மகதலா மரியா எத்தனையோ விதமான தவறுகளை இழைத்த போதும் ஆண்டவர் இயேசுவின் இரக்கத்தால் மன்னிப்பைப் பெற்றார். தான் செய்த தவறுகளை எண்ணி மனம் வருந்தியவர், மனமாற்றம் பெற்றவராக, இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர். அவர் இயேசுவின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பின் அடிப்படையில் தான் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை முதன்முதலாக அறிந்து கொண்டு, அந்த அறிந்து கொண்ட செய்தியை அகிலத்தில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், முதல் சீடராக இயேசுவின் உயிர்ப்பை உலகிற்கு அறிவித்தார். 

   இந்த மகதலா மரியாவை மனதில் இருத்தி சிந்திக்கின்ற நாம் அத்தனை பேரும் நமது வாழ்வில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளிலிருந்து விடுபட்டு கடவுளுக்குரிய பாதையில் ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆற்றல் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...