திங்கள், 22 ஜூலை, 2024

இறைத் திருவுளப்படி வாழ்வோம்! (23-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவர் இயேசுவின் மீதுஅதீத நம்பிக்கை கொண்டவர்களாக அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரின் வார்த்தையை கேட்டு அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்ளுகிற அத்தனை நபர்களுமே அவரின் சகோதர சகோதரிகளாக மாறுகிறோம் என்பது இன்றைய இறைவார்த்தை வழியாக நமக்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த இறை வார்த்தையை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இறைவனுக்கு உகந்த மக்களாக இறைவனின் திருவுளப்படி நமது செயல்களை அமைத்துக் கொள்ளக்கூடியவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறை அருளை வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...