செவ்வாய், 23 ஜூலை, 2024

நூறு மடங்கு பலன் தருவோம்! ( 24-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. நிலத்தில் விழுகின்ற விதை உவமையை இயேசு சுட்டிக் காண்பித்து, இதயத்தில் விழுகின்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடியவர்களாக, நூறு மடங்கு விளைச்சலை தருகின்ற வகையில் செயல்படக் கூடியவர்களாக, நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

   இயேசுவின் இந்த அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக வெறுமனை ஆண்டவரின் வார்த்தைகளை கேட்டு விட்டு நகர்ந்து விடாமல், கேட்கின்ற வார்த்தைகளுக்கு செயல்வடிவம் தருகின்ற நபர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...