வெள்ளி, 19 ஜூலை, 2024

நான் என்றும் உன்னோடு! (18-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


 இன்றைய இறை வார்த்தையானது நாம் ஆண்டவர் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் நம் துன்ப துயரங்களை அவரிடத்தில் அர்ப்பணித்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆயிரக்கணக்கான துன்பங்களுக்கு மத்தியில் துவண்டு போயிருந்த ஒவ்வொருவரையும் இயேசு அன்றைய காலகட்டத்தில் தேடிச் சென்று நலம் தந்தார். அதே இயேசு எந்நாளும் நம்மோடு இருக்கிறார். வாழ்வில் துன்பங்களை சந்திக்கின்ற போதெல்லாம் நம்மை தேற்றுபவராக, துன்பங்களை எதிர்கொள்வதற்கான ஆற்றலை தருபவராக, கடவுள் நம்மோடு இருக்கிறார். இந்த கடவுளின் உடனிருப்பை இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...