வெள்ளி, 10 மே, 2019

வியாழன் -இரவு செபம்

வியாழன்
அருள்வாக்கு 1தெசலோணிக்கர் 5: 23
அமைதியை அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக.
அவரே, நம் ஆண்டவர் இயேசு கிறித்து வரும்போது, உங்களுடைய உள்ளம், ஆன்மா,
உடல் அனைத்தையும் குற்றமின்றி முமுமையாகக் காப்பாராக.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! இந்நாளில் உழைப்பால் நாங்கள் மிகவே சோர்வடைந்துள்ளோம்.
அமைதியான உறக்கத்தால் எங்களைப் புதுப்பித்தருளும். இவ்வாறு, உமது உதவியால்
சோர்வு நீங்கிய நாங்கள் உடலாலும், உள்ளத்தாலும் உமக்கு பணிபுரிவோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக
உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...