வெள்ளி, 10 மே, 2019

சனி-இரவு செபம்

சனி
அருள்வாக்கு இணைசட்டம் 6 : 4 - 7
இசுரயேலே செவிகொடு! நம் கடவளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன்
முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன்
கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்கு கட்டளையிடும்
இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின்
உள்ளத்தில் பதியமாறு சொல். உன் வீட்டில் இருக்கம்போதும், உன்
வழிபயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றை பற்றி பேசு.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! எம் இல்லத்தை சந்தித்துப் பகைவனின் கண்ணிகள் அனைத்தையும்
எங்கள் இல்லத்திலிருந்து அகற்றியருள உம்மை மன்றாடுகின்றோம். உம்முடைய
தூதர்கள் எங்கள் இல்லத்தில் குடியிருந்து எங்களை அமைதியில் காப்பர்களாக. உமது
ஆசி எங்கள்மீது என்றென்றும் தங்குவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...