வெள்ளி, 10 மே, 2019

ஞாயிறு-இரவு செபம்

ஞாயிறு
அருள்வாக்கு திருவெளிப்பாடு 22 : 4 – 5
கடவுளின் பணியாளர்கள் அவர்களது முகத்தை காண்பார்கள். அவரது பெயர்
அவர்களுடைய நெற்றியில் எழுப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ
அவர்களுக்கு தோவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது
ஒளிவீசுவார். அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! நாங்கள் எல்லாத் தீமைகளினின்றும் விடுதலையடைந்து, அமைதியில்
கண்ணுறங்கவும் உம் புகழ்ச்சியைப் பாட மகிழ்ச்சியோடு விழித்துக் கொள்ள
வேண்டுமென்ற எங்கள் பணிவான வேண்டுதலைக் கேட்டருளும். என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...