வெள்ளி, 10 மே, 2019

ஞாயிறு-இரவு செபம்

ஞாயிறு
அருள்வாக்கு திருவெளிப்பாடு 22 : 4 – 5
கடவுளின் பணியாளர்கள் அவர்களது முகத்தை காண்பார்கள். அவரது பெயர்
அவர்களுடைய நெற்றியில் எழுப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ
அவர்களுக்கு தோவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது
ஒளிவீசுவார். அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! நாங்கள் எல்லாத் தீமைகளினின்றும் விடுதலையடைந்து, அமைதியில்
கண்ணுறங்கவும் உம் புகழ்ச்சியைப் பாட மகிழ்ச்சியோடு விழித்துக் கொள்ள
வேண்டுமென்ற எங்கள் பணிவான வேண்டுதலைக் கேட்டருளும். என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

1 கருத்து:

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...