ஞாயிறு, 8 ஜனவரி, 2023

நீயே என் அன்பார்ந்த மகன் !உன்னில் நான் பூரிப்படைகிறேன்! (06-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
        இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெறுகின்ற நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற தண்ணீரில் இறங்கிய போது, வானம் திறந்து, தூய ஆவியானவர் இயேசுவின் மீது இறங்கியதை யோவான் காண்கின்றார். 

          இவரே என் அன்பார்ந்த மகன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என இயேசுவை குறித்து விண்ணகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்ததையும் அவர் கேட்கின்றார். 
                         இன்று நாமும் திருமுழுக்கு பெற்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களாக,  இந்த இயேசு கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு நமது வாழ்வை அமைத்துக் கொண்டு இருக்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பி பார்ப்போம்.

          நாம் அறியாத பருவத்தில் நம் பெற்றோர் மூலமாக நாம் பெற்றுக் கொண்ட அந்த திருமுழுக்கின் அடிப்படையில் நாமும் தூய ஆவியானவரை பெற்றிருக்கிறோம்.  தூய ஆவியாரை பெற்றிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, இவரே என் அன்பார்ந்த மகன்; இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று கடவுள் சொல்லுகின்ற அளவிற்கு நமது வாழ்வை நெறிபடுத்தி இருக்கிறோமா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து நமது வாழ்வை நெறிப்படுத்தக் கொண்டு கடவுள் காட்டுகின்ற பாதையில் அனுதினமும் பயணிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...