ஞாயிறு, 8 ஜனவரி, 2023

அரசரை வணங்க வந்திருக்கிறோம்! (08-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
    ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழாவை இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருகின்றோம்.  மூன்று ஞானியர்கள் ஆண்டவர் இயேசுவை காண்பதற்காக சென்றார்கள். தங்களிடம் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்தார்கள். பொன்னையும், வெள்ளை போளத்தையும், சாம்பிராணிகையும் கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்து கடவுள் மனிதனாக வந்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார்கள். இந்த ஞானியர்களை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளிலே, ஞானிகள் போல நான் என்ன பரிசை கடவுளுக்கு கொடுக்கப் போகிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம். 
   இன்றைய முதல் வாசகம், எழுந்து ஒளி வீசு! என நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த ஆண்டவரை ஏற்றுக் கொண்டிருக்கிற நாம் ஒவ்வொருவருமே இந்த ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் இந்த சமூகத்தில், இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டுவது போல, நமது கடமையை உணர்ந்து செயல்படுகின்ற மனிதர்களாக, மற்றவர்களுக்கு ஒளி வீசுகின்ற மனிதர்களாக, இருப்பதற்கான ஆற்றலை பெற்றுக் கொள்ளவும், அந்த ஆற்றலோடு தொடர்ந்து பயணிக்கவும் அழைக்கப்படுகிறோம்.  இந்த அழைப்பை இதயத்தில் இருத்தியவர்களாக நாம் கடவுளுக்கு தருகின்ற விலைமதிப்பில்லாத பரிசு, அவரை ஏற்றுக் கொண்டவர்கள் நாம் என்பதற்கு நமது சொல்லும் செயலும் சான்றாக அமைய வேண்டும் என்பதை இதயத்தில் இருத்திக்கொண்டு பயணிக்க இன்றைய நாளில் இறை வேண்டல் செய்வோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பலனை எதிர்பாராமல் பணி செய்வோம்!(28-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...