வியாழன், 19 ஜனவரி, 2023

நம்பிக்கையோடு ஆண்டவரை நாடிச் செல்வோம்! (19-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

     இன்றைய இறை வார்த்தையானது நம்பிக்கையோடு கடவுளை நாடிச் சென்ற பல நபர்களை நமக்கு சுட்டிக் காண்பித்து நாமும் நம்பிக்கையோடு இறைவனை நாடிச் செல்வதற்கான அழைப்பினை நமக்கு தருகின்றன.  ஒவ்வொரு நாளுமே கடவுள் நமது வாழ்வில் புதிதாக தருகின்றார் என்றால் அந்த நாளில் அந்த கடவுளை வெளிப்படுத்துகின்ற மனிதர்களாக, அந்த கடவுளின் பண்பு நலன்களை பிரதிபலிக்கின்ற மனிதர்களாக, நாம் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளுமே நமக்கு வலியுறுத்துகின்றது.

               ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பல நோயாளிகளும், பல தீய ஆவி பிடித்திருந்த நபர்களும் 
நலம் பெற வேண்டும் என்று எண்ணத்தோடு நாடிச்சென்று நலன்களை பெற்றுக் கொண்டார்கள் என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது இத்தகைய நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாளும் நாம் கடவுளை நாடிச் செல்லுகிற போது, அவரின் பண்பு நலன்களை நமது நலன்கள் ஆகக் கொண்டு இந்த சமூகத்தில் அவரை பிரதிபலிக்கின்ற மனிதர்களாக விளங்க முடியும் என்பதை உணர்ந்தவர்களாக நம்பிக்கையோடு இறைவனை நாடிச் சென்று நலன்களை பெற்றுக் கொள்ள இறைவன் இன்றைய இறைவார்த்தை வழியாக நமக்கு அழைப்பு தருகின்றார். இந்த அழைப்பை இதயத்தில் இருத்தியவர்களாக நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்ல இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

My Portfolio. ( 2025)