ஞாயிறு, 8 ஜனவரி, 2023

ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா! (09-01-2023)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

தன்னிடம் திருமுழுக்கு பெற வருகின்ற இயேசுவை குறித்து யோவான், நீரா என்னிடம் திருமுழுக்கு பெற வருவது? என்று கேட்டு, தன்னைத்தானே தாழ்த்திக் கொண்ட ஒரு மனிதனாக, அதே சமயம் கடவுளின் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கின்ற ஒரு மனிதனாக இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுக்கின்றார். அந்த திருமுழுக்கின் வாயிலாக வரவிருக்கின்ற மெசியா இவர் தான் என்பதை அறிந்து கொண்டு, அந்த மெசியாவை அருகில் இருந்த ஒவ்வொருவருக்கும் சுட்டிக் காட்டுகின்ற நபராக, யோவான் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். 
     இந்த யோவானைப் போல நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகின்றோம். நாம் அறிந்திருக்கின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அடுத்தவருக்கு அறிவிக்கவும், அந்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக் கொண்டு, தொடர்ந்து பயணிப்பதற்கான ஆற்றலையும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...