புதன், 18 ஜனவரி, 2023

நற்செய்தியின் ஆண்டவரை பின்பற்றிச் செல்வோம்! (11-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

           கடவுள் எப்போதும் நம்மோடு துணை நிற்கக் கூடியவர். இந்த கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக, நாம் அவரது பணியினை செய்பவர்களாக இந்த சமூகத்தில் இருக்க வேண்டும் என்பதை இயேசுவின் வாழ்வில் இருந்து இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.  நோயுற்ற நிலையில் இருந்த பேதுருவின் மாமியாரை இயேசு தேடிச் செல்கிறார்; அவருக்கு குணம் தருகின்றார்.  தன்னுடைய பணியை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், வாருங்கள் அடுத்த ஊருக்கு செல்வோம்; அங்கும் நான் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என சொல்லி,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து நற்செய்தி அறிவிப்பதற்காக பல இடங்களுக்கு சென்றதை இன்றைய வாசகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்கிறோம். 

     இந்த வாசகத்தின் பின்னணியோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்கிற போது, கடவுள் எல்லா நேரங்களிலும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துகிறார்;  நாம் துன்பத்தில் வாடுகிற போதும், மகிழ்ச்சியில் திளைக்கிற போதும், இந்த கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துகிறார். இந்த கடவுளின் நற்செய்தியை நாமும் இந்த இயேசுவை பின்பற்றியவர்களாக  பல்வேறு இடங்களுக்குச் சென்று பல மனிதர்களுக்கு இந்த இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்பதை இன்றைய நாள் இறை வார்த்தையின்  அடிப்படையில் உணர்ந்து கொண்டவர்களாக, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு, அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் பணியை அடுத்தவருக்கு அறிவிக்க, ஆவலோடு பயணிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...