வியாழன், 19 ஜனவரி, 2023

இயேசுவைப் போல நன்மைகள் செய்வோம்! (18-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் !

நல்லது செய்வது மட்டுமே நம் வாழ்வின் இலக்காக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக இயேசுவின் வாழ்வில் இருந்து நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது சென்ற இடமெல்லாம் நன்மை செய்தார். அப்படி அவர் செய்த ஒரு நன்மைத்தனத்தையே இன்றைய இறைவார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. 

         கை சூம்பிய நிலையில் இருந்த ஒரு மனிதனுக்கு நலம் பெற வேண்டுமென இறைவன் இயேசு விரும்புகின்றார். ஆனால் சுற்றி இருந்தவர்கள் அனைவருமே ஓய்வு நாளில் இம்மனிதன் இச்செயலை செய்தால் இவனை குற்றவாளியாக குற்றம் சுமத்த வேண்டும் என்ற மனநிலையோடு அவரை சூழ்ந்து இருந்தார்கள். 

       தன்னை சுற்றி இருப்பவர்களின் மனநிலையை உணர்ந்தவராக இருந்தாலும் தன் வாழ்வில் தான் எதை பின்பற்ற வேண்டும் என்பதை உணர்ந்தவராக இயேசு கிறிஸ்து நன்மை செய்வதையே தன் வாழ்வின் இலக்கு என்பதை உணர்ந்து அதனை செய்கின்ற நபராக இருந்தார். இந்த இயேசுவை பின்பற்றக்கூடிய நீங்களும் நானும் ஒவ்வொரு நாளுமே இந்த சமூகத்தில் நம்மால் இயன்ற நன்மைகளை செய்து கொண்டே செல்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...