புதன், 18 ஜனவரி, 2023

தொழுநோய் நீங்கியது! அவரும் நலமடைந்தார்!(12-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

         நமது உள்ளம் என்பது எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்த உள்ளத்தில் தீய எண்ணங்கள் மேலோங்க கூடாது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. உள்ளத் தூய்மையோடு ஒரு மனிதன் தொழுநோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் கூட,  சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவனாக இருந்தபோதிலும் கடவுளை நாடிச் சென்று  இயேசுவிடம் இருந்து  ஆசிகளை பெற்றவனாக தனது நோயில் இருந்து குணம் பெறுகின்ற  ஒரு நிகழ்வைத் தான் இன்றைய  நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

             நமது உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொண்டு  ஆண்டவரை நாடிச் செல்லுகின்ற போது, நாம் 
நலன்களைப் பெற்றுக் கொள்வோம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. 

       இந்த வாசகங்களின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து, நல்லதொரு மாற்றத்தை முன்னெடுத்தவர்களாக நமது உள்ளத்தை தூய்மை செய்து கொண்டு, அனுதினமும் ஆண்டவரை நாடிச் செல்லுகின்ற மனிதர்களாக நாம் இருப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...