செவ்வாய், 10 மே, 2022

இருளில் இராதபடி !(11.5.2022)

இருளில் இராதபடி !

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் கட்டளைகள் நிலை வாழ்வை அளிக்கின்றன என்பதையும், அதை கடைபிடிக்காதவருக்கு, அந்த கட்டளைகளுக்கு செவிகொடுத்து நடக்காதவர்களுக்கு இறுதிநளில் தண்டனை தீர்ப்பு கிடைக்கும் என்பதையும் ஆண்டவர் இயேசு இன்று கூறுகிறார்.

ஆண்டவர் இயேசுவின் கட்டளைகள் நிலைவாழ்வு அளிக்கும். அவை இருளில் இராதபடி ஒவ்வொருவரையும் ஒளிக்கு அழைத்துச் செல்லும். ஒளி இருக்கின்ற இடத்தில் வாழ்வு துவங்கும். ஒளி இருக்கின்ற இடத்தில் நன்மைகள் மலரும். ஒளி இருக்கின்ற இடத்தில் அனைவரும் மகிழ்ச்சியை காண்பார்கள். இவ்வாறாக ஆண்டவரின் கட்டளைகள் இருக்குமிடத்தில் ஒளியும் மகிழ்ச்சியும் வாழ்வும் நிறைந்திருக்கும். 
ஆனால் ஒளியின் பாதையை அறிந்திருந்தும், அதில் நடக்காதவர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் வார்த்தை தண்டனை தீர்ப்பை வழங்கும் என்று கூறுகிறார். அவர்கள் ஒளியை காணாதபடி இருளில் சென்று சேர்வார்கள் என்று குறிப்பிடுகிறார். 

நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.
யாக்கோபு 4:17

                                    என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப பிறருக்கு வாழ்வு கொடுக்க உதவிக்கரம் நீட்டுவோம். ஒளியின் மக்களாக வாழ்வோம். ஆண்டவரின் கட்டளைகளை கடைபிடித்து நிலை வழ்வின் பாதையில் நடந்திட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...