புதன், 11 மே, 2022

இருக்கின்றவர் நானே!(12.5.2022)



இருக்கின்றவர் நானே!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து "இருக்கின்றவர் நானே", என்று கூறுகிறார். நான் அனுப்பியவரை ஏற்றுக்கொள்ளுகிறவர் என்னை ஏற்றுக் கொள்கிறார், என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பிய தந்தையை ஏற்றுக்கொள்கிறார்  என்கிறார். 

இந்த உலகில் ஆண்டவரின் பணியை அன்புடன் ஆற்ற எத்தனையோ நபர்களை இறைவன் இந்த உலகிற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார். நமக்கும் கூட அவரது இறையாட்சி பணிக்கு அழைப்பு தருகிறார். 

இந்த நாட்களில் சிறப்பாக இறை அழைத்தல் பணிக்காக தம்மை அர்ப்பணித்த பல்வேறு மறை மாவட்டங்கள் மற்றும் துறவற சபைகள் சார்ந்த அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளை இறைவன் சிறப்பாக தமது பணிக்காக தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களுக்காக இன்றைய நாளில் சிறப்பாக செபிப்போம். 

உன்னை என்று பெயர் சொல்லி அழைத்ததும் நானே உன்னை திருநிலைப்படுத்தியதும் நானே என்று கூறும் ஆண்டவர், தமது ஆவியாரின் அருள் கொடைகளை அவர்கள் அனைவருக்கும் நிறைவாக வழங்கிடவும், அவர்களுக்கு முன்னும் பின்னும் வலமும் இடமும் அரணும் கோட்டையும் ஆக இருந்து அவர்களுக்கு நல்ல உடல் உள்ள நலன்களை தந்து அவர்களது பணி ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஆசீர்வதித்து வழிநடத்த செபிப்போம்.

நம் புதிய அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் வழியாக ஆண்டவர் இயேசுவைக் கண்டு அவர்களோடு இணைந்து நாமும் தந்தை இறைவனை மாட்சிப்படுத்த, அவர்களின் பணிகளில் நாமும் உறுதுணையாக இருக்க, இன்றைய நாளில் இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...