புதன், 4 மே, 2022

கடவுள்தாமே கற்றுத் தருவார்!...(5.5.2022)

கடவுள்தாமே கற்றுத் தருவார்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகத்தில் எத்தியோப்பிய நிதி அமைச்சர் கந்தகி எசாயாவின் இறைவாக்கு நூலை ஆர்வத்தோடு வாசித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அது முழுமையாக விளங்காவிட்டாலும் ஆர்வத்தோடு வாசித்துக் கொண்டிருக்கிறார். 

இன்றைய நாள் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கடவுள் தாமே கற்றுத் தருவார் என்று கூறுகிறார். மேலும் என் தந்தை ஈர்த்தாலொழிய என்னிடம் வர இயலாது என்கிறார். 

ஆண்டவர் இயேசு இவ்வாறு கூறுவதன் வழியாக, ஆண்டவரையும் அவரது காரியங்களையும் ஆர்வத்தோடு தேடுகிறவர்களுக்கு கடவுள் தாமே  அனைத்தையும் கற்றுத் தருவார் என அமைச்சர் கந்தகியின் வாழ்க்கை நிகழ்வுகள் வழியாக நமக்கு வெளிப்படுத்துகிறார்.

 அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
மத்தேயு 6:33

என்ற இறைவார்த்தையின் வழியாக இறைவனுக்கு ஏற்புடைய காரியங்களை  செய்பவர்களாக நாம்  இருக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு தருகிறார். எனவே இன்றைய நாளில் நாம் முன்னெடுக்கின்ற காரியங்களில் இறைவனது விருப்பத்தையும் அறிந்து அதற்கேற்ற வகையில்  செயல்பட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...