ஞாயிறு, 1 மே, 2022

நிலை வாழ்வு தரும் உணவு எது?(2.5.2022)

நிலை வாழ்வு தரும் உணவு எது?


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

உணவு- அது இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவசியமானது. ஒருவர் உணவை உண்ணுகின்ற பழக்கமானது , அவரது வாழ்வின் பண்புகளையும் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த உலகினில் எதை உண்போம்? எதைக் குடிப்போம்? என்று கவலை கொள்ள வேண்டாம்.  உங்கள் தேவை என்ன என்பதை உங்கள் வானகத் தந்தை அறிந்திருக்கிறார். எனவே அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். மாறாக நிலைவாழ்வு தரும் உணவுக்காகவே உழையுங்கள் என்று ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்மை உழைக்க அழைக்கின்றார். 

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும் என நாம் ஒவ்வொரு நாளும் விண்ணகத் தந்தையை நோக்கி ஜெபிக்கிறோம். நானே உயிர் தரும் உணவு என்று கூறும் இயேசு ஆண்டவர் , தன்னையே நமக்கு உணவாக தருகின்றார். 

வழக்கமாக நாம் அருந்துகின்ற ஒவ்வொரு உணவும் அதன் அதனுக்குரிய சத்துகளை நமக்கு வழங்கிச் செல்கின்றது. அது போல நமது வாழ்வின் உணவாக தன்னையே வழங்கிய ஆண்டவர் இயேசுவை ஒவ்வொரு நாளும் உணவாக உட்கொள்ளும் நாம், அவரது உணவினால் ஊட்டம் பெறும் நாம்  அதன் வெளிப்பாடாக , அவரது இறையாட்சியை மலரச் செய்வோம். நமது அன்பினால், கனிவினால், இரக்கத்தால்,  நிலை வாழ்வின் உணவுக்காக உழைத்திட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...