ஞாயிறு, 15 மே, 2022

அன்புக் கட்டளை....(16.5.2022)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

ஆண்டவர் தந்த அன்புக் கட்டளையை ஏற்றுக்கொண்டு அதை தன் வாழ்வாக மாற்றிக் கொள்ளக்கூடிய ஒவ்வொருவருமே ஆண்டவரை அறிந்து கொள்ள முடியும்.  அன்புக் கட்டளையை தன் வாழ்வாக்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

 ஆண்டவரை அறிந்து கொள்ளவும், தன்னை வெளிப்படுத்தும் இறைவனை உணர்ந்து கொள்ளவும், நாம் அன்பை ஆடையாக அணிந்த மக்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம்.  அன்பால் அகிலத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அன்பு செய்து வாழவும், அன்பால் அனைவரோடும் இணைந்து இருக்கவும் இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.  அன்பே அனைத்திற்கும் ஆணிவேர். அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள், என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப அன்பில் அணை போட எவராலும் இயலாது என்பதை உணர்ந்தவர்களாய் கண்ணில் காணும் ஒவ்வொரு மனிதரையும் எந்தவித பாகுபாடும் வேறுபாடுமின்றி அன்பு செய்து வாழ, அந்த அன்பால் ஆண்டவர் இயேசுவை அறிந்து கொள்ள, அந்த அன்பின் நிமித்தமாக ஆண்டவர் தம்மை வெளிப்படுத்துவதை உணர்ந்துகொள்ள, இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...