வெள்ளி, 27 மே, 2022

ஊக்கம் ஊட்டக்கூடிய மனிதர்களாகிட....(27.5.2022)

ஊக்கம் ஊட்டக்கூடிய மனிதர்களாகிட....

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களை இன்றைய நாளில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தன்னுடன் எழுந்தவுடன் உழைப்பாளர்களை ஊக்கமூட்டி இறைவனின் நற்செய்தி அறிவிப்பதற்கு அவர்களை தகுதி படுத்துவது குறித்து நாம் வாசிக்க கேட்டோம் ...

அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என் தந்தையிடம் கேளுங்கள் நீங்கள் கேட்பதை அவர் உங்களுக்கு தருவார் என ஊக்கமூட்டும்வதையும் நாம் வாசிக்கின்றோம். 

ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளும் புனித பவுலின் வார்த்தைகளும் இறைவனோடு உறவாட இறைவனது வார்த்தைகளை இதயத்தில் இருத்தி நம்பிக்கையோடு இறைவார்த்தையை அறிவிக்கும் பணியில் ஈடுபட நமக்கு ஊக்கம் தருகிறது இன்று நாம் வாழும் உலகத்தில் பற்றாக்குறையை நிலவுவது உணவுக்காகவும் அன்புக்காகவும் மட்டுமல்ல ஊக்கமூட்டும் தடுக்கும் என்ற பற்றாக்குறை நிலவுகிறது. இன்றைய நாளில் நாம் சந்திக்கும் மனிதர்களை ஊக்கமூட்டும் இறைவனோடு அவர்கள் உறவில் வளரவும் இறைவார்த்தையின் அடிப்படையில் அவர்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் ஊக்கம் ஊட்டக்கூடிய மனிதர்களாக நாம் இன்றைய நாளில் செயல்பட இறைவனிடத்தில் அருள்வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலியில் ஜெபிப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...