திங்கள், 2 மே, 2022

இயேசுவின் பெயரால் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வோம்...(3.5.2022)

இயேசுவின் பெயரால் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வோம்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசு இன்றைய வாசகத்தின் வழியாக, அன்று தம் சீடர்களோடு உரையாடியது போல இன்று நம்மோடும் உரையாடுகிறார்.
தந்தையும் நானும் ஒன்றாகவே இருக்கிறோம். என்னைக் கண்டவன் தந்தையை காண்கிறான்  என்று கூறுகிறார். 

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னை விட பெரியவற்றை செய்வார் என்று இயேசு கூறுவதன் வழியாக, இன்று இயேசு நமது நம்பிக்கையில் ஆழப்பட, உறுதி கொள்ள,  நம்மை அழைக்கிறார். 

உண்மையில் இயேசு ஆண்டவரை விட பெரியவர் இந்த உலகத்தில் நிச்சயமில்லை என்பது நாம் அறிந்ததே.  ஆயினும் அவரில் உண்மையான நம்பிக்கை கொண்டவர் அவரை விட பெரிய காரியங்களை செய்வார் என்று இயேசு கூறுவதன் வழியாக,  இந்த உலகில் ஆண்டவரின் பணி இன்னும் அதிகமதிகமாக, அவர் வாழ்ந்த காலத்தை விட இன்றைய நாட்களில் அதிகம் அதிகமாக தேவைப்படுகிறது என்பதை ஆண்டவர் இயேசு நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.

வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்று கூறுவதன் வழியாக, ஆண்டவரின் வழியாக செய்யப்படுகின்ற காரியங்கள் நிறைவான ஆசீர்  பெறும் என்பதையும், இதையே "என் பெயரால் நீங்கள் கேட்பதையெல்லாம் தந்தை உங்களுக்கு அருள்வார்" என்று ஆண்டவர் கூறுகிறார். 

எனவே இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் வல்லமையை பெற்றுக்கொண்ட சீடர்கள் தூய ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட சீடர்கள், ஆண்டவர் இயேசுவின் பணியை ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் எதிர்வருகின்ற தடைகளையெல்லாம் வென்று அவரது பணிகளை இம்மண்ணில் ஆற்றியது போல, நாமும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் தூய ஆவியாரின் வல்லமையை ஆண்டவரிடம் கேட்போம். அவரது அருளையும் நிறைவாகப் பெற்றுக் கொண்டு அவரின் சாட்சிகளாக இம்மண்ணில் அவரின் பணியை செய்திட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...