புதன், 31 மே, 2023

இயேசு துன்புற்றார்; மாட்சியோடு உயிர்த்தெழுந்தார்! (13-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
நேற்றைய வாசகங்களின் தொடர்ச்சியாகவே இன்றைய வாசகங்கள் அமைகின்றன. பேதுருவால் நலம் பெற்ற மனிதன் பேதுருவை பின்பற்றிக்கொண்டு அவரோடு உடன் இருக்க, அந்த மனிதனை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, இந்த மனிதனை குணப்படுத்தியது எங்கள் வல்லமையால் அல்ல; நாங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த வல்ல செயல் நிகழ்ந்தது என்று சொல்லி, தன்னை முன்னிலைப்படுத்தாது இயேசுவை முன்னிலைப்படுத்தும்  நபராக பேதுரு விளங்குவதை முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

      அதுபோலவே நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களோடு உரையாடுகிறார். அவர்களோடு மீன் துண்டை பகிர்ந்து உண்ணுகிறார். அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து,  நீங்கள் மனமாற்றம் பெற்றவர்களாக பாவத்தை விலக்கிவிட்டு நல்லதொரு மன மாற்றத்தோடு ஆண்டவர் இயேசுவின் சாட்சிகளாக இறைவனின் திட்டத்தை இம்மண்ணில் நிலை நாட்டுகின்ற மனிதர்களாக இருப்பதற்கான அழைப்பை அன்று இயேசுவின் சீடர்களுக்கு இயேசு கொடுத்ததை தான் நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்கிறோம்.

    இந்த இரண்டு வாசகங்களையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, இயேசுவை ஏற்றுக் கொண்டிருக்கின்ற நாம் நம்மை முன்னிலைப்படுத்தாது, கடவுளுக்குரிய காரியங்களை முன்னிலைப்படுத்தக் கூடியவர்களாக, கடவுளுடைய திட்டத்திற்கு சான்று பகருகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...