புதன், 31 மே, 2023

படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்! (25-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
               இன்றைய இறை வார்த்தைகள் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ள நமக்கு அழைப்பு கொடுக்கின்றன.  கடவுளின் வல்லமை மிக்க கரத்தின் கீழ் நம்மை தாழ்த்த கூடியவர்களாகவும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக, அதிலும் முதல் வாசகம் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

      இயேசுவும் தன்னுடைய சீடர்களுக்கு உலகெங்கும் சென்று நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்று சொல்லி, பலவிதமான அதிகாரங்களையும் ஆற்றல்களையும் வழங்கினார் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த இயேசுவை அறிந்திருக்கின்ற ஒவ்வொருவரும் அவரை அறிக்கை இடுகின்ற போது அத்தனை ஆசிகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக, நாம் வாழுகின்ற இந்தச் சமூகத்தில் தொடர்ந்து இயேசுவின் பணியை செய்கிறவர்களாகவும், இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பவர்களாகவும், அவரின் வல்லமை மிக்க கரத்தின் கீழ் நம்மை தாழ்த்தி அவரிடமிருந்து ஆசிகளை பெற்று கொள்ளக் கூடியவர்களுமாக இருப்பதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...