புதன், 31 மே, 2023

நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்! (2-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

           இன்றைய இறை வார்த்தையில் இயேசுவும் தந்தையும் இணைந்திருப்பது போல நீங்களும் நானும் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும் என்ற மைய சிந்தனையானது நமக்கு வழங்கப்படுகிறது. கடவுளோடு நாம் இணைந்திருக்கிற போது நமது வாழ்வு நெறிப்படும். அவரோடு இணைந்திருக்கிற போது அவரது குரலுக்கு செவி கொடுக்கின்ற மக்களாக நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் நாம் அமைத்துக் கொள்ள முடியும். 

            நாம் அவரது குரலுக்கு செவி கொடுத்து அவரது பாதையில் அவரை பின்தொடருகின்ற மனிதர்களாக நாளும் பயணிக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிக்க இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...