புதன், 31 மே, 2023

நிலை வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன! (29-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

         இன்றைய இறை வார்த்தைகள் இயேசுவைப்போல நமது வாழ்வை அமைத்துக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றன.  இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நன்மைத்தனத்தை பலருக்கு எடுத்துரைத்தார். அவர் பேசுவதை கேட்டு பலரும் முணுமுணுத்துக் கொண்டு, வாழ்வில் பின்பற்றுவதற்கு சாத்தியம் இல்லை என்று சொல்லிவிட்டு அவரை விட்டு அகன்று போனார்கள். 

    தன்னை விட்டு பலர் அகன்று சென்ற போதும் கூட இயேசு தம் சீடர்களை நோக்கி, நீங்களும் செல்லவிருக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார். ஆனால் இயேசுவின் சீடர்கள் அவரோடு இருந்து அவரை புரிந்து கொண்டார்கள். இயேசுவின் வார்த்தைகள் பின்பற்றுவதற்கு கடினம் என எண்ணியவர்கள் கூட, காலப்போக்கில் இந்த இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க முடியும் என்பதில் நிலைத்திருந்தார்கள். இதற்கு அடிப்படையான காரணம் இயேசுவோடு உடன் பயணித்து, இயேசுவின் வார்த்தைகளை தங்கள் வாழ்வாக மாற்றிக் கண்ட திருத்தூதர்களின் வாழ்வு சாட்சிய வாழ்வாக அமைந்தது. இந்த திருத்தூதர்களின் வாழ்வைப் போல நமது வாழ்வும் சாட்சிய வாழ்வாக அமைய ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...