புதன், 31 மே, 2023

ஆண்டவரை முழுமையாக அறிந்திடுவோம்! (28-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

        இயேசுவைப் பற்றி அறிவிப்பவர்களை எல்லாம் அடியோடு அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது பயணத்தை தொடங்கிய சவுலை ஆண்டவர் ஆட்கொள்வதை குறித்து இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?  என்ற இயேசுவின் கேள்விக்கு, நான் எங்கே உம்மை துன்புறுத்தினேன்? என்று கூறிய சவுலிடம், நீ துன்புறுத்தும் இயேசு நான்! என்று சொல்லி, தன்னை வெளிப்படுத்திய இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொண்டு இதுநாள் வரை செய்த அத்தனை தீமைகளையும் புறம் தள்ளிவிட்டு, யாரைப் பற்றி பேசுபவர்களை கொல்ல வேண்டும் என்று தன் பயணத்தை துவங்கினாரோ, அந்த இயேசுவைப் பற்றி யார் கொல்லச் சொன்னார்களோ அவர்களிடத்தில் சென்று துணிவோடு எடுத்துரைக்கின்ற மனிதனாக இந்த பவுல் மாறியதை நாம் இன்றைய நாளில் சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். இந்த பவுலை நமது முன்மாதிரியாக எடுத்துக்கொள்வோம்.  சவுல் என்ற நிலையில் இருந்து பவுல் என்ற நிலைக்கு அவர் கடந்து வந்த போது, ஆண்டவரை முழுவதுமாக அறிந்திருந்தார்.  அறிந்த ஆண்டவருக்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்க துணிந்தார். இவரைப் போல நமது வாழ்வை நாமும் வாழ அழைக்கப்படுகின்றோம்.  நமக்காக தனது இன்னுயிரை தந்த இயேசுவை இதயத்தில் இருத்தி, நமக்கு முன்மாதிரியாக பவுலை முன்னிறுத்தி நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இயேசுவின் பாதையில் இனிதே பயணிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...