புதன், 31 மே, 2023

நிலை வாழ்வு தரும் உணவுக்கே உழையுங்கள்! (24-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       
           இன்றைய இறை வார்த்தையானது இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதர்களாக சாட்சிய வாழ்வு வாழக்கூடிய சான்று பகரும் மனிதர்களாக நீங்களும் நானும் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள அழைப்பு விடுக்கின்றன. இயேசுவை அறிந்து கொண்ட ஸ்தேவான் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எடுத்துரைத்தார்.  ஆனால் அவர் மீது பொய் சுமத்தினார்கள். 
  ஆனாலும் துணிவோடு தான் அறிந்த இயேசுவைப் பற்றி எடுத்துரைத்த அவரது முகமானது வான தூதரின் முகம் போல இருந்ததை இன்றைய முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

                   நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசுவை தேடி வந்தவர்கள் அவர் செய்த அரும் அடையாளங்களுக்காக வயிரார அப்பங்களை உண்பதற்காக தேடி வந்தார்களே ஒழிய, அவர்கள் ஆன்மீக உணவை பெறுவதற்காக, ஆண்டவரின் வார்த்தையை உள்வாங்குவதற்காக வரவில்லை என்பதை இயேசு சுட்டிக்காட்டுகின்றார். இயேசுவின் பணியை செய்கின்ற ஒவ்வொருவருமே வாழ்வில் வருகின்ற அத்தனை இடர்பாடுகளிலும், நன்மை தீமை எது என்பதை அறிந்தவர்களாக நன்மைத்தனத்தை ஊக்குவிப்பவர்களாகவும், தீமையானதை எதிர்க்கின்ற நபர்களாகவும், அது தீமை என்பதை எடுத்துரைக்கின்ற மனிதர்களாகவும் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆற்றல் வேண்டிட அழைக்கப்படுகின்றோம்.  நாம் இத்தகைய செயல்பாடுகளை நமது வாழ்வாக மாற்றுகிற போது, பலரின் நிராகரிப்புகளையும் எதிர்ப்புகளையும் நாம் சந்திக்க நேரிடும்.  சந்திக்கின்ற போதெல்லாம் இயேசுவை இதயத்தில் இருத்திக்கொண்டு ஸ்தேவானைப் போல சாட்சிய வாழ்வு வாழ இன்றைய நாளில் ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...