புதன், 31 மே, 2023

மகனை அன்பு செய்வோர் நிலை வாழ்வை உரிமை பேறாக பெறுவர்! (26-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

         தொடக்க காலத்தில் இயேசுவைப் பற்றி அறிவித்தவர்கள் எல்லாம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானார்கள் என்பதை விவிலியத்தின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்கிறோம். ஆனால் அத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் ஆண்டவரின் பணியை செய்கின்றவர்களாக, அடுத்தவர்களுக்கு நன்மை செய்கின்ற நபர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் அப்படி வாழ்ந்ததற்கான அடிப்படை காரணம், அவர்கள் இயேசுவிடமிருந்து கற்றுக் கொண்ட வாழ்வுக்கான பாடம். என்னிடம் வருவோருக்கு தாகும் இராது என்று சொன்ன அந்த இயேசுவை நம்பி, அவரின் வார்த்தைகளை வாழ்வாக்க முயற்சித்து அதில் வெற்றி கண்டவர்கள், நாம் காணுகின்ற அத்தனை புனிதர்களும் இயேசுவின் சீடர்களும்.

    இவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு நாமும் இயேசுவின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தருகின்ற நபர்களாக, துன்பங்களுக்கு மத்தியிலும் துணிவோடு இயேசுவை அறிவிப்பவர்களாக இருக்க ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...