புதன், 31 மே, 2023

ஆடுகளுக்கு வாயில் நானே! (30-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

       ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்ட சீடர்கள், இயேசுவை குறித்த செய்தியை துணிவோடு எடுத்துரைத்தார்கள். நம்பிக்கை கொண்டு மனமாற்றமடைந்து வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இயேசுவின் பாதையில் பயணம் செய்ய இயேசுவின் சீடர்கள் அழைப்பு கொடுத்தார்கள்.  இதை குறித்து தான் இன்றைய முதல் வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. இந்த அழைப்பினை இதயத்தில் ஏற்றுக்கொண்டு இந்த இயேசுவைப்போல நாமும் வாழவும், இயேசுவை அறிவித்த சீடர்களின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி, நல்லதொரு மனமாற்றத்தோடு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பின்தொடரவும் நாம் அழைக்கப்படுகிறோம். இந்த இயேசுவின் வாழ்வை பின் தொடர்கிற போது பலவிதமான துன்பங்களை நாம் சந்திக்க நேரிடலாம். நன்மைகள் செய்திருந்த போதும் துன்பங்கள் நமக்கு பரிசாக கிடைக்கலாம்.  அந்த துன்பங்களுக்கு மத்தியிலும், கடவுள் நம்மை காக்க வல்லவர் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக, பொறுமையோடு காத்திருந்து கடவுளை கண்டு கொள்ளவும்,  அவர் காட்டிய பாதையை பின்பற்றி அவரின் பின்னே பயணம் செய்கின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொண்டு நல்ல ஆயனாகிய இந்த ஆண்டவரைப் பின்பற்றுகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...