புதன், 31 மே, 2023

மானிட மகனே விண்ணகம் சென்றார்! ( 18-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

      
    உயிர்த்த ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நம் உள்ளங்கள் உயர வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த உயிர்த்த இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டதன் அடிப்படையில் தான் தொடக்க கால கிறிஸ்தவர்கள் இந்த இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள். இந்த இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நற்செய்தியின் விழுமியமாக இறையாட்சியின் மதிப்பீடாக கற்றுக் கொடுத்த அத்தனை பண்புகளுக்கும் செயல் வடிவம் தருகின்ற நபர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டார்கள். இருப்பதையெல்லாம் விற்று அதனை பகிர்ந்து கொடுப்பதற்காக திருத்தூதர்களின் காலடிகளில் கொண்டு வந்து வைக்கின்ற மனநிலை கொண்ட மனிதர்களாக தொடக்க கால கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். இவர்களின் மனமாற்றத்திற்கு அடிப்படை காரணம் ஆண்டவர் இயேசுவின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை.  இத்தகைய நம்பிக்கை நமது நம்பிக்கையாக மாற வேண்டும் என்பதைத்தான் இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து நாமும் இந்த உயிர்த்த ஆண்டவரின் மீது இன்னும் ஆழமான நம்பிக்கையில் நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...