புதன், 31 மே, 2023

கடவுள் அனைத்தையும் கற்றுத் தருவார்! (27-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

     கடவுள் அனைத்தையும் நமக்கு கற்றுத் தருவார் என இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. கடவுள் கற்றுத் தருகின்றவற்றை மனதில் இருத்திக் கொண்டு நமது செயல்களில் அதனை வெளிப்படுத்துகின்ற நபர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

      முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட பிலிப்பின் வாழ்வு அப்படித்தான் அமைந்திருந்தது. ஆண்டவரின் ஆவியார் அவரை எழுந்து ஒரு இடத்திற்கு செல்ல சொல்கிறார். அவரும் அங்கு செல்லுகின்றார். அவ்வழியே வருகின்ற எத்தியோப்பியா நகர அரசின் நிதி அமைச்சருக்கு எசாயாவின் நூலை விளக்கிச் செல்லுமாறு தூய ஆவியானவர் துண்ட பிலிப்பும் அத்தேரின் அருகில் சென்று அவருக்கு இயேசுவைப் பற்றி விளக்கி கூறி, அவருக்கு திருமுழுக்கு கொடுப்பதை நாம் இன்றைய முதல் வாசகமாக வாசிக்கக் கேட்டோம். 

   இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்திக் கொண்டு நாமும் ஒவ்வொரு நாளும் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்ற நபர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் ஆண்டவரிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...