புதன், 31 மே, 2023

அசைக்க முடியாத நம்பிக்கை கொள்வோம்! (19-4-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

           ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளுகின்ற ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை ஒளியின் வாழ்வாக அமைத்துக் கொள்ளுகிறார்கள்; உண்மை நிறைந்த வாழ்வாக அமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் செய்கின்ற அத்தனை செயல்களும் கடவுளோடு இணைந்து செய்கின்ற செயல்களாக கருதப்படுகின்றன என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

                இன்றைய முதல் வாசகத்தில் கூட இயேசுவைப் பற்றி அறிவித்ததன் விளைவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை கடவுள் உடனிருந்து பாதுகாப்பதை குறித்தும் அவர்கள் இந்த துன்பங்களுக்கு மத்தியிலும் துணிவோடு இயேசுவைப் பற்றி எடுத்துரைத்ததை குறித்தும் நாம் வாசிக்க கேட்டோம். இந்த சீடர்களிடத்தில் காணப்பட்ட அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆழமான பற்றுறுதியும் இன்று நம்மிடம் வளர வேண்டும் என்பதைத்தான் இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன. இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு நாளும் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு அவரோடு இணைந்து பல காரியங்களை செய்கின்றவர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...