ஞாயிறு, 13 ஜூலை, 2025

“அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.” (14.7.20

அன்புக்குரிய சகோதரர்/சகோதரிகளே,

 “அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.” – மத்தேயு 10:34


இன்றைய நற்செய்தியில் நாம் கேட்கும் இயேசுவின் வார்த்தைகள் நம்மை ஆச்சரியம் அடைய செய்கின்றன.  இயேசு, அமைதியின் இறைவனாக  கருதப்படுகிறார். ஆனால் இன்று இயேசு நற்செய்தி வாசகத்தின் வாயிலாக  சொல்கிறார்: "அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்" என்று. இந்த வார்த்தைகளின் ஆழத்தை உணர நாம் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 


1. உண்மையான அமைதிக்கு வழிவைக்கும் மோதல்

இயேசு கூறும் “வாள்” என்பது உடலை வெட்டும் ஆயுதம் அல்ல; அது உண்மை மற்றும் உண்மையை பின்பற்றும் திடமான மனநிலையை குறிக்கிறது. இயேசுவின் வார்த்தைகள், தன்னை முழுமையாக பின்பற்ற விரும்பும் ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு உள்நாட்டுப் போர்களையும், உறவுகளிலுள்ள சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும்.
நாம் கடவுளின் வார்த்தைகளின் படி வாழ வேண்டும் என  தேர்ந்தெடுக்கும் போது, பொய்யான அமைதியை விட்டுவிட்டு, உண்மையின்  மேல் அடிக்கோடிட்ட வாழ்க்கைக்கு பயணிக்கிறோம்.


2. சிந்திக்க வேண்டியவை – உண்மைக்கு  முதலிடம்

யார் தம் தந்தை, தாயை, மகனை, மகளை, இயேசுவை விட மேலாக நேசிக்கிறார்களோ, அவர்கள் இயேசுவின் சீடத்துவத்திற்கு   தகுதியற்றவர்கள் என அவர் கூறுகிறார். 

இவ்வார்த்தைகள் வழியாக  இயேசு நம் உறவுகளை மதிக்க வேண்டாம் எனக் கூறவில்லை, ஆனால் அவையெல்லாம் அவரை விட முதன்மையானதாக இருக்கக்கூடாது என்பதைக் கூறுகிறார்.

இயேசுவை பின்பற்றும் வாழ்க்கை என்பது ஒருவேளை வலி தரக்கூடிய ஒரு வாழ்வாக  இருக்கலாம். ஆனால், அது நிறைவான  மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் உண்மையான அர்த்தத்திற்கு வழிவகுக்கும்.


3.இழப்பில் மகிழ்வோம் ...

இயேசு சொல்லுகிறார்:

"தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்."

இது ஒரு வாழ்வுக்கான பாடம் வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.

இயேசுவுக்காக நம்மை நாமே ஏற்றுக் கொண்டவர்களாய் தியாக உள்ளத்தோடு  செல்கின்ற வாழ்வில் நமது அன்றாட பயணம் என்பது சிலுவையைச் சுமந்து செல்லும் பாதை. அது சவாலானதாக இருந்தாலும், இறுதியில்  உடன் இருப்பை உணர்ந்ஆண்டவரின்து கொள்ள இது உதவியாக அமைகிறது. 


4. ஒரு சிறு செயலும் அர்த்தமுள்ளது

நற்செய்தியின் முடிவில், இயேசு குறிப்பிடுகிறார் –

“ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்.”

இது நம் வாழ்வின் சிறு செயல்களுக்கு மகத்தான அர்த்தமுள்ளது என்பதை  காட்டுகிறது. நாம் இயேசுவின் சீடர்களாக இருப்பதற்கான அடையாளம்     

ஆகவே, வாருங்கள்... இயேசுவுக்காக நம் சிலுவையை நாமே  ஏற்றுக்கொண்டு, அவரை வாழ்வின் முதன்மையானதாக வைத்து, அக்கட்டளைகளின் படி வாழ வரம் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம் 

 என்றும் அன்புடன் 

அருள் பணி ஜே. சகாயராஜ் 

திருச்சி மறை மாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

“I did not come to bring peace, but a sword.” – Matthew 10:34 (13.7. 2025)

Dear Brothers and Sisters in Christ, “I did not come to bring peace, but a sword.” – Matthew 10:34 The words of Jesus in today’s...