வியாழன், 31 ஜூலை, 2025

இன்றே செய்வோம்! (6-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!



 இன்றைய இறைவார்த்தையானது நாம் நமது வாழ்வில் அனுதினமும் பின்பற்ற வேண்டியவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நாம் எப்போதுமே ஆண்டவருக்கு உகந்தவர்களாக இருக்க வேண்டுமாயின் நம் கடமைகளை அவ்வப்போது செய்கின்றவர்களாக இருக்க வேண்டும். இன்று செய்ய வேண்டிய பணிகளை நாளை என்று தள்ளிப் போடுகின்ற ஒரு நிலையை நாம் முற்றிலுமாக தவிர்க்க, பழைய தோற்பையில் புதிய மதுவை ஊற்றுவதை சுட்டிக் காண்பித்து இயேசு நமது வாழ்வில் அன்றன்றைய நாளுக்குரிய கடமைகளை அன்றே முடிப்பதற்கான அழைப்பை கொடுக்கிறார். இந்த அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக நம் கடமைகளை ஒவ்வொரு நாளும் சரிவர செய்ய இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இன்றைய நாளில் இறைவன் நமக்கென கொடுத்து இருக்கின்ற பணிகளை இறைவனின் துணையோடு சிறப்பாக செய்து முடித்திட இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்...  சிலுவையின் வழி மீட்பு... 1. கடவுளின் அற்புதமான அழைப்பு இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரே...