வியாழன், 31 ஜூலை, 2025
தளரா மனத்துடன் நன்மைகளை முன்னெடுப்போம்! (7-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இன்றைய வார்த்தையானது ஆண்டவர் இயேசுவின் வாழ்வில் இருந்து நமது வாழ்வுக்கான பாடத்தை கற்றுக் கொண்டு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து நன்மைகளை செய்த போதும் கூட அவரது உறவுகள் அவரை ஏற்றுக் கொள்ளாத நிலையை சந்தித்தார். பல நேரங்களில் பலவிதமான இன்னல்களையும் இடையூறுகளையும் தன் வாழ்வில் அவர் சந்திக்க நேர்ந்தது. நன்மைகளை மட்டுமே முன்னெடுத்திருந்தாலும் உடன் இருப்பவர்கள் அவரை உணர்ந்து கொள்ளாத சூழலை சந்தித்தார். இது போன்ற சூழலை நாமும் நமது வாழ்வில் சந்திக்க நேரிடலாம். அப்படி சந்திக்கின்ற போதெல்லாம் மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையோடு இயேசுவை மனதில் இருத்தி நன்மைகளை செய்பவர்களாக மட்டும் நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ளவில்லை என்றாலும் கூட, அவர்களை ஏற்றுக் கொண்டு நம்மால் இயன்ற நன்மைத்தனங்களை தொடர்ந்து முன்னெடுப்பவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)
உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... சிலுவையின் வழி மீட்பு... 1. கடவுளின் அற்புதமான அழைப்பு இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரே...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக