ஞாயிறு, 27 ஜூலை, 2025

நம்பிக்கையில் வேரூன்றும் வாழ்க்கை... (28.7.2025)

நம்பிக்கையில் வேரூன்றும் வாழ்க்கை


அன்பு சகோதரர்களே மற்றும் சகோதரிகளே,

இன்றைய முதல் வாசகத்தில் நாம்  மோசே மலைமேல் கடவுளோடு நேரில் உரையாடிக்கொண்டிருக்கும் போது, கீழே மக்கள் பொன்னால் உருவாக்கிய கன்றுக்குட்டியைத் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். இவர்கள் கடவுள் செய்த நன்மையை மறந்து , தங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டதை க் காண்கிறோம். இங்கே கடவுளோடு உரையாட மலை மேல் ஏறிய மோசேவின்  தாமதத்தை ஏற்க முடியாமை, மனவெறுப்பு, மற்றும் நம்பிக்கையின்மையின் விளைவாக ஒரு பெரும்  பாவச் செயலை செய்கின்றனர்.

காத்து வந்த கடவுளை மறந்து தன் மனம் போன போக்கில்உருவங்களை வடித்து தெய்வங்கள் என கருதினார்கள்...

நாம் கடவுளுக்காக காத்திருக்கத் தெரியவில்லையென்றால், நமது இருதயம் எதை தெய்வமாக மாற்றிக் கொள்கிறது?

என சிந்திப்போம் , நாமும் சிக்கல்கள் வந்தால் தீர்வுக்காக கடவுளை நோக்காமல் உடனடி பதில்களைத் தேடி, பாவ வழிகளில் நம்மை செலுத்திக் கொள்கிறோமா? சிந்திக்கவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

நம்மோடு இருப்பவர்கள் தவறு இழைக்கின்ற போது மோசே செய்த செய்த செயல் நம் செயலாக மாறிட வேண்டும்....
அவர் பாவத்தை மன்னிக்குமாறு ஆண்டவரை நோக்கி மன்றாடுகிறார்.... செய்த தவறை மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி உறவுகளைப் பிரித்துக் கொண்டு வாழ்வதை நிறுத்தி தவறிழைத்தவர்கள் மனம் மாறிட இறைவனிடத்தில் இறைவேதலை முன்னெடுக்கின்ற நபர்களாக தவறிய நபர்களுக்காக வரைந்து பேசுகின்ற நபர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்தவே ஓசையின் வாழ்வு நமக்கு அழைப்பு தருகிறது. 

இதை மையப்படுத்தியே என்ற இனச் செய்தி வாசகமும் அமைகிறது இயேசு கூறும் கடுகு விதை உவமை நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது:

கடுகு விதை மிகச் சிறியது. ஆனால் அது வளரும்போது பெரிய மரமாகிறது.

அது வளரவேண்டுமானால், அது நிலத்தில் விதைக்கப்பட வேண்டும்.
அது மழையையும், வெயிலையும், பொறுமையையும் கடக்க வேண்டும்.
அதனால்தான் அது உயரே வளர முடியும்... அதில்  வானத்தின் பறவைகள் தங்கக் கூடியதாக மாற முடியும் 

அதைப்போலவே, நம் நம்பிக்கை வாழ்க்கையும் தொடக்கத்தில் மிகச் சிறியதாகத் தோன்றலாம். ஆனால், நாம் அதை வளர்த்தால், அது மற்றவர்களுக்கு நிழலும், தங்கும் இடமுமான நற்பணி மரமாக மாறும்.  அதுபோலவே நமது சின்னஞ்சிறிய செயல் மிகப்பெரிய தாக்கத்தை இந்த சமூகத்தில் உருவாக்கும் என நம்பிக்கை கொள்வோம்.  இத்தகைய ஆழமான நம்பிக்கையோடு ஆண்டவர் நம் குரலுக்கு செவி கொடுப்பார் என்ற உறுதியோடு காத்திருக்க நாம் பழகிட வேண்டும். 

எனவே அன்பு சகோதரமே...மோசே போல பாவத்திற்குள் விழும் மக்களுக்காக இறைவனை நாளும் நாடுவோம் .
கடுகு விதையைப் போல காத்திருந்து  நம் நம்பிக்கையை நிலைத்திருக்க செய்வோம்...
புளிப்பு மாவைப் போல நம் வாழ்வால் மற்றவர்களும் இறைநம்பிக்கையில் மாற்றம் அடையட்டும்.

என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறைமாவட்டம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...