ஞாயிறு, 13 ஜூலை, 2025

மனம் மாறிடவே அழைக்கப்படுகிறோம்... (15.7.2025)

மனம் மாறிடவே அழைக்கப்படுகிறோம்...

 அன்பார்ந்த சகோதர சகோதரிகளே


இன்றைய நற்செய்தியில் இயேசு கோபத்தோடு பேசுவது போல தோன்றினாளும்... கடவுள் தருகின்ற அழைப்பை உணர்ந்து நெறிப்படுத்தி கொள்ளத் தவறுகிற வாழ்வை இறைவன் சரி செய்து கொள்வதற்கான கோபமாக அதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.  

“தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்” என்பது இயேசுவின் வார்த்தைகளாக நாம் இன்று வாசிக்க கேட்கிறோம்...

இயேசு வல்ல செயல்களை நிகழ்த்திய கோராசின், பெத்சாய்தா, கப்பர்நாகூம் போன்ற நகரங்களில் மக்கள் மனம் மாறாததை சுட்டிக்காட்டி கடவுள் தருகின்றஅழைப்பையும் அவரது அருளையும்உதாசீனப்படுத்தி வாழுகிற வாழ்வை சரி செய்யவே இவ் வார்த்தைகளை இயேசு உதிர்க்கின்றார்.

இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் ...இறைவன் நமக்கு செய்த எல்லா நன்மைகளையும் நினைவு கூற நாம் அழைக்கப்படுகிறோம் ...

பல நேரங்களில் நாம் சொல்லாலும் செயலாலும் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வைத் வாழ தவிர இருந்தாலும் கூட கடவுள் நமக்குத் தருவதாக சொன்ன எந்த அருளையும் குறைத்துக் கொண்டவர் அல்ல ...அனுதினமும் உண்ண உணவையும் உடுக்க உடையும் இருக்க நல்ல இடத்தையும் நல்ல நண்பர்களையும் கொடுத்து நம்மை நாளும் வழி நடத்துபவர் இறைவன் ... அவரிடமிருந்து ஆயிரக்கணக்கான நன்மைத்தனங்களை பெற்றுக் கொள்ளுகிற நாம் அவர்கள் வார்த்தைகளின் வழி தான் நமது வாழ்வை அமைத்திருக்கிறோமா...? என்பதை குறித்து சிந்திக்கவே இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 

மனம் மாறுவதற்கான அழைப்பு பல நேரங்களில் வழங்கப்பட்ட போதும் கூட அதை உதாசீனப்படுத்த விட்டு மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவே இன்றைய இரவு வார்த்தை வழியாக இறைவன் மக்களோடு உரையாடுகிறார் ... அன்று அப்பகுதி மக்களோடு உரையாடிய இறைவன் இன்று உங்களோடும்... என்னோடும்... உரையாடுகிறார் என்பதை உணர்ந்தவர்களாக நாம் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வை வாழ தவறிய சூழலிலும் கூட அவர் நமக்கு செய்த எல்லா நன்மைகளையும் நன்றியோடு நினைவுகூர்ந்து நல்லதொரு மனமாற்றம் பெற்றவர்களாக நாளும் இயேசுவின் பாதையில் இணைந்து பயணிக்க இறையருள் வேண்டுவோம்.... இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்....


என்றும் அன்புடன்

அருள் பணி ஜே. சகாய ராஜ் 

திருச்சி மறைமாவட்டம் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஓய்வு நாள் கடவுளின் நாள்...(18.7.2025)

ஓய்வு நாள் கடவுளின் நாள்... இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...  இயேசுவின் வார்த்தைகள...