ஞாயிறு, 11 ஜூலை, 2021

அமைதியா? வாளா? (12.7.2021)

அமைதியா? வாளா?

இறைவனில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்வில் நாம் நல்லவற்றை செய்யலாம் நாம் செய்த நல்லவற்றை எளிதில் பலர் மறந்து நம்மீதும், நம்மைச் சார்ந்தவர்கள் மீதும் துன்பங்களை வாரி வழங்கலாம்...ஆனால் அந்நேரங்களில் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்ற பாடம் இன்றைய நாளில் கற்பிக்கப்படுகிறது. 

யோசேப்பு பலவிதமான நன்மைகளை எகிப்திய மக்களுக்கு செய்திருந்தும் யோசேப்பு மறைந்தவுடன் எகிப்தியர்கள் இஸ்ரவேலரை துன்புறுத்தக் கூடியது பற்றி இன்றைய நாளில் நாம் வாசிக்க கேட்டோம் ...
நன்மை செய்து இருந்தும் துன்பத்தை பெறுகின்ற நிலை உருவாகும்போது வாழ்வில் அமைதியை ஏற்படுத்துவதா அல்லது வாளை கொணர்வது  என்ற கேள்வியானது உள்ளத்தில் எழும்  அந்நேரங்களில் நாம் சூழலுக்கேற்ற வகையில் செயல்பட இறைவன் அழைக்கின்றார். இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை தனது பணிகளை பல இடங்களுக்கு அனுப்புகின்றார் ஏற்ற அவர்களிடம் தங்குமாறு ஏற்காதவர்கள் இடம் இருந்து முற்றிலும் விலகி விடுமாறும் இயேசு அவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார் இந்த பாடம் அவர்களுக்கு அது மட்டுமல்ல நமக்கும் தான் ...
வாழ்வில் தேவையான இடங்களில் அமைதியையும் வாளையும் கொணரக் கூடியவர்களாக இறையருள் வேண்டுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...