செவ்வாய், 20 ஜூலை, 2021

பராமரிப்பை உணர..... (21.7.2021)

பராமரிப்பை உணர.....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
  இறைவன் அனுதினமும் நம்மை பராமரித்து பாதுகாத்து வருகின்றார். அவரது பராமரிப்பை உணர்ந்து கொண்டு, அவருக்கு பலன் தரக்கூடிய விதைகளாக நாம் இருக்க இன்றைய நாளில்  அழைக்கப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரயேல் மக்களை எகிப்தில் இருந்து இறைவன் மீட்டு வந்தார். ஆனால் ஆண்டவரின் உடன் இருப்பையும் பராமரிப்பையும் உணர்ந்து கொள்ளாத அந்த மக்கள் பல நேரங்களில் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்தவர்களாக, ஆண்டவரின் பராமரிப்பை உணராதவர்களாக, செயல்பட்டார்கள். அந்த நேரங்களில் எல்லாம் ஆண்டவர் அந்த மக்கள் மீது கோபம் கொள்ளாமல், மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியவராக இருக்கின்றார். 

 பொதுவாகவே மனித மனம் தேவையில் உழலும் போது, நல்லது என பார்க்கக்கூடிய பார்வையில், தேவை முடிந்த பிறகு அதை பொருட்படுத்தாத நிலையும் மனித மனங்களில் இயல்பாகவே இருக்கிறது. இதுதான் இஸ்ரயேல் மக்களின் வாழ்விலும் பிரதிபலித்தது. தங்களது தேவையை நிறைவேற்ற இறைவனை தேடினார்கள். தேவை நிறைவேறியவுடன் இறைவனை மறந்தார்கள். நாமும் பல நேரங்களில் அவ்வாறு செயல்படுகிறோம். அவ்வாறு செயல்பட்டால் நாம் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக, விளைச்சல் தரக்கூடியவர்களாக இருக்க இயலாது. இறைவன் நம் அனைவரையும் தன் பிள்ளைகள் என ஒரே அளவான அன்பையும் அக்கறையையும் பராமரிப்பையும் வழங்குகிறார் ஒவ்வொரு நாளுமே. அவருடைய பராமரிப்பை உணர்ந்து கொண்டு நாம், நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் போல பலன் தரக்கூடிய மனிதர்களாகிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். நாம் நல்ல நிலத்து விதைகளாக பலன் தர, ஆண்டவரின் பராமரிப்பை உணர்ந்துகொள்ள,  இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...