திங்கள், 12 ஜூலை, 2021

வாழ்வில் நல்லது செய்கின்ற போது இடர்களா...?

வாழ்வில் நல்லது செய்கின்ற போது இடர்களா...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் 
இன்றைய முதல் வாசகத்தில் எகிப்தில் அடிமையாக இருந்த இஸ்ரேல் மக்களை மீட்பதற்கு இறைவன் மோசே என்ற நபரை பிறக்க வைத்தது ...அழிவிலிருந்து அக்குழந்தையை காப்பாற்று இஸ்ரயேல் மக்கள் சார்பாக செயல்பட வைக்கிறார். ஆனால் தனி சார்பாக செயல்படக்கூடிய நபரை நீதி யார் எங்களுக்கு தலைவனா என்று கூறி அவரை புறக்கணிப்பதை நாம் வாசிக்க கேட்போம் ...
இயேசுவும் இந்த உலகத்தில் வாழ்ந்த போது பலவிதமான நற்செயல்களை செய்துவந்தும்...அவரை பலர் புறக்கணித்த தையும் அவரை நம்பாத அதையும் ஏற்றுக் கொள்ளாமல் நீயும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்போம்.
இவ்வாசகப் பகுதிகள் நமக்குத் தருகின்ற செய்தி...
நாம் நல்ல பணிகளை செய்து என்றபோது அதை பலர் ஏற்றுக் கொள்ளாமலும், அதனை நிராகரித்து, நாம் அவர்கள் சார்பாக செயல்படுகிறோம் என்பதை கூட புரிந்து கொள்ளாமலும், நம்மை பல நேரங்களில் புறக்கணிக்கலாம். அந்நேரங்களில் எல்லாம் மனமுடைந்து போகாது ஆண்டவர் இயேசுவைப் போல நல்ல பணிகளை நாம் செய்ய வேண்டும். 

தன்னுடைய மக்கள் தன்னை புறக்கணித்தாலும் ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படிந்து மோசே மீண்டும் அவர்களைத் தேடி வந்தார். எகிப்தில் இருந்து அவர்களை மீட்டுச் சென்றனர் ..

இந்த மோசேவைப் போல நாமும் நமது வாழ்வில் நல்லது செய்கின்ற போது சந்திக்கின்ற இடையூறுகளுக்கு மத்தியில் ஆண்டவரின் சொல் படி நடக்கக் கூடியவர்களாக இருக்க இறையருளை வேண்டுவோம்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...