ஞாயிறு, 25 ஜூலை, 2021

வாழ்க்கைப் பாடம் கற்றிட....(26.7.2021)

வாழ்க்கைப் பாடம் கற்றிட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று தாய்த் திருஅவையாக நாம் இணைந்து புனித சுவக்கின் அன்னம்மாளின் திருநாளை அனுசரிக்கின்றோம்.  இந்த நல்ல நேரத்தில் புனித அன்னாள் பெயரை தாங்கி இருக்கக்கூடிய அருட்சகோதரிகளுக்கு நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

         "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒரு குழந்தை இச் சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதை அந்த குழந்தையைக்  கொண்டு பெற்றோரை அறிந்து கொள்ள இயலும்.  அதன் அடிப்படையில் அன்னை மரியாளை திருஅவை உயரிய இடத்தில் வைத்திருக்கிறது. அன்னை மரியா இத்தகைய உயரிய இடத்தை திரு அவையிலும் நமது உள்ளங்களிலும் அடைந்திருக்கிறார் என்றால் அவரை வளர்த்தெடுத்த அவரது பெற்றோரை நினைவு கூருவது சிறப்பு வாய்ந்தது. அதன் அடிப்படையில்தான் திருஅவை இன்று அவர்களை நினைவு கூருகிறது.  முதிர்ந்த வயதில் மரியாவை பெற்றெடுத்து, மரியாவை
 கடவுளின் திட்டப்படி மிகவும் அற்புதமாக வளர்த்து, இறைவனின் மீட்புத்திட்டத்திற்கு கையளித்தார்கள் சுவைக்கீனும், அன்னம்மாளும்.

         இன்று நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி வாசகத்திலும் கூட,  ஒரு சிறிய கடுகு விதை பெரிய மரமாக மாறி பலருக்கு பலன் தருகிறது. சிறிதளவு புளிப்பு மாவு ஒட்டு மொத்த மாவையும் புளிப்பேறச் செய்கிறது.  அது போல நமது பெற்றோர் நமக்கு கற்பிக்கின்ற சிறிய, சின்னஞ்சிறு நற்செயல்கள் தான் நம்மை இச்சமூகத்தில் மிகப்பெரிய நற்செயலை ஆற்றுவதற்கு உந்துசக்தியாக அமைகின்றன. 

           இன்றைய நாளில் அன்னை மரியாவின் தாய் தந்தையரை நினைவு கூருவதோடு நகர்ந்து விடாமல், நாம் நமது தாய் தந்தையரையும், நமது வீட்டில் இருக்கக் கூடிய முதியவர்களையும் நினைத்துப் பார்ப்போம். அவர்களை பராமரித்துக் கொள்வோம். அவர்களிடமிருந்து அவர்களின் அனுபவத்தின் துணையோடு நமது வாழ்வுக்கான வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொண்டு இந்த நாளை இனிய நாளாக மாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...